இப்படி ஒரு மோதல்


அவளுக்கு எந்த ஆணையுமே காதலிக்க முடியாத சூழல். அவனோ எந்தப் பெண்ணையும் கவர்ந்துவிடுவான். இவர்கள் சந்தித்தால் என்ன ஆகும் என்பதைச் சொல்ல வருகிறது 'இதயத்தில் இடம் கொடு'. நாயகன் புதுமுகம் உதயகுமார். ஜோடியாக வருகிறார் இனியா. இவர்களுடன் முக்கிய வேடத்தில் கஞ்சா கருப்பு நடிக்கிறார். கதை, திரைக்‌கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்குகிறார் ராம்குமார். இசை: குமார். ஒளிப்பதிவு: ராஜ்குமார். காதல், சென்டிமென்ட், ஆக்‌ஷன், நகைச்சுவை என எல்லாம் கலந்த சூப்பர் மசாலாவாக இப்படம் இருக்கும் என்கிறார் இயக்குநர்.

அரவிந்த்

© TamilOnline.com