அட்லாண்டா: இசைப் போட்டிகள்
அட்லாண்டாவில் திருமதி கலா வாசுதேவன் அவர்களின் 'ஸ்ருதிலயா இசைப்பள்ளி' கடந்த ஆறு வருடங்களாக வாய்ப்பாட்டு, வாத்திய இசை மற்றும் பாடத்தில் போட்டிகளை நடத்தி வருகிறது. இந்த வருடம் முதல் சுற்றுகள் முடிவடைந்து மே 21-ம் தேதி அட்லாண்டா இந்துக் கோயிலில் இறுதித்தேர்வு நடைபெற்றது. அட்லாண்டா மற்றும் சுற்றியுள்ள மாகாணங்களிலிருந்து பலர் போட்டிகளில் பங்கேற்றனர்.

கீதா பென்னெட், டாக்டர் சேஷு சர்மா, பாபநாசம் கோகுல் ஆகியோர் நடுவர்களாகப் பணியாற்றினார்கள். பாபநாசம் கோகுல் வயலின், டாக்டர் ராம் ஸ்ரீராம் மிருதங்கம் பக்க வாத்தியத்துடன் கீதா பென்னெட்டின் வாய்ப்பாட்டுக் கச்சேரியைத் தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.



© TamilOnline.com