CCC மாணவர்கள் குவித்த பரிசுகள்
கர்நாடிக் சேம்பர் கான்செர்ட்ஸ் (CCC) அமைப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியில் பத்மா மோகன் அவர்கள் தலைமையில்இயங்கி வருகிறது. இந்த அமைப்பின் குறிக்கோள் கர்நாடக சங்கீதம் பயிலும் குழந்தைகளுக்கு ஊக்கம் அளிப்பதுதான். மாதம் ஒருமுறை சந்திக்கும் இந்த அமைப்பில் தற்சமயம் எழுபதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். இந்த அமைப்பைச் சேர்ந்த குழந்தைகள் சென்ற வாரம் நடந்த கிளீவ்லாந்து தியாகராஜ ஆராதனைப் போட்டிகளில் பங்கேற்று 22 பரிசுகளைத் தட்டி வந்துள்ளார்கள். பரிசு வாங்கிய குழந்தைகளின் பெற்றோர்கள் CCC அமைப்பு தந்த உற்சாகத்துக்கும் இதில் பங்கு உண்டு என்று பெருமையாகப் பேசுவது குறிப்பிடத் தக்கது. விவரங்களுக்கு: www.CarnaticChamberConcerts.com

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com