திகில்


அது ஒரு காடு. அந்தக் காட்டில் வைரப் புதையல் இருக்கிறது. அதைத் தேடிச் செல்லும் பலர் மர்மமான முறையில் இறக்கின்றனர். அவர்கள் உடல்கூடக் கிடைப்பதில்லை. அது ஏன், உண்மையில் அங்கு புதையல் உள்ளதா, இல்லையா என்பதைக் கண்டறிய புறப்படுகிறார், சி.பி.ஐ. அதிகாரியான கதாநாயகி சிந்தூரா. கண்டுபிடித்தாரா அல்லது அவரும் காணாமல் போனாரா என்பதை கதையாகக் கொண்டு உருவாகி வரும் படம் திகில். இதில் கதாநாயகியாக நடிக்கும் சிந்தூரா, 2007ம் ஆண்டின் மிஸ். இந்தியாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். கதாநாயகன் இல்லாத இப்படத்தில் நிழல்கள் ரவி, பொன்னம்பலம், ரிஷா, பரணி உட்படப் பலர் நடிக்கின்றனர். இசை: சாய்கார்த்திக். இயக்கம்: நகேஷ்.

அரவிந்த்

© TamilOnline.com