பாலமுருகனுக்குக் கரிகாலன் விருது
தமிழக எழுத்தாளர்கள் மட்டுமல்லாமல் ஈழ, மலேசிய, சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் குறித்தும் தொடர்ந்து தென்றல் பதிவு செய்து வந்துள்ளது. அந்த வகையில் சிங்கப்பூரின் முக்கிய எழுத்தாளர்களுள் ஒருவரான கே. பாலமுருகன் (பார்க்க: தென்றல், டிசம்பர் 2008 எழுதிய நூலான 'நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்' தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கரிகாலன் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. விருதை, ஜனவரி 1, 2011 அன்று சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் சார்பில் சிங்கப்பூரில் நடக்கும் விழாவில், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ராசேந்திரன் வழங்குகிறார். வாழ்த்துகள்.



© TamilOnline.com