அநுத்தமா
'தென்னாட்டு ஜேன் ஆஸ்டின்' என்று போற்றப்பட்ட அநுத்தமா (88), டிசம்பர் 3, 2010 அன்று சென்னையில் காலமானார். மத்தியதர வர்க்கப் பெண்களின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் படைப்புகளை எழுத்தில் வடித்த அநுத்தமா, நெல்லூரில் பிறந்தவர். இயற்பெயர் ராஜேஸ்வரி. கணவர் பத்மநாபனின் உறுதுணையுடன் எழுதத் தொடங்கிய இவர், 300க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 22 நாவல்களையும், பல வானொலி நாடகங்களையும் படைத்திருக்கிறார். தனக்கென ஒரு தனிப் பாணியில் பழமையோடு நவீன சிந்தனைகளையும் இணைத்து காத்திரமான படைப்புகளைத் தந்தவர். அண்மையில் தென்றல் இவரைப் பற்றிய சிறப்புக் கட்டுரையையும், அவரது கதையிலிருந்து ஒரு பகுதியையும் வெளியிட்டிருந்தது. (பார்க்க: தென்றல், அக்டோபர் 2010)

அரவிந்த்

© TamilOnline.com