கணிதப்புதிர்கள்
1. 59 பேர் அடங்கிய மாணவர்கள் சுற்றுலாச் சென்றனர். அவர்களை அழைத்துச் செல்ல சில வேன்களும், கார்களும் வந்தன. வேன்களில் 9 பேர் மட்டுமே அமர முடியும். காரில் 4 பேர்கள் அமரலாம். மாணவர்கள் அவற்றில் ஏறி அமர்ந்ததும் எந்த ஒரு இடமும் காலியிக இருக்கவில்லை என்றால் வேன்கள் எத்தனை, கார்கள் எத்தனை?

2. ஒரு குடும்பத்தில் நிறைய சகோதர, சகோதரிகள் இருந்தனர். ஒருவனுக்கு எத்தனை சகோதரர்கள் இருந்தனரோ அதே எண்ணிக்கைக்குச் சகோதரிகளும் இருந்தனர். ஆனால் ஒரு சகோதரிக்கு எத்தனை சகோதரர்கள் உள்ளனரோ அதில் பாதி எண்ணிக்கையில்தான் சகோதரிகள் உள்ளனர். அப்படியானால் மொத்த சகோதர, சகோதரிகளின் எண்ணிக்கை எவ்வளவு?

3. ராமனிடம் 17 மாடுகள் இருந்தன. அவருக்கு மூன்று மகன்கள் இருந்தனர். அதில் முதலாமவன் மாடுகளில் பாதியையும், இரண்டாமவன் மூன்றில் ஒரு பங்கையும், முன்றாமவன் ஒன்பதில் ஒரு பங்கையும் பிரித்துக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். அது போன்று பிரிக்க இயலாத அவர்கள் தங்கள் ஆசிரியரை நாடினர். அவர் மிகச் சரியாக அவற்றைப் பிரித்துக் கொடுத்தார். அவர் எப்படிப் பிரித்துக் கொடுத்திருப்பார்?

4. ராமுவின் பையிலிருந்த ஒரு புத்தகத்தின் சில பக்கங்களை ஒரு குழந்தை கிழித்து எறிந்து விட்டது. அது கிழித்த பக்கங்களின் எண்கள் 6, 7, 32, 63, 64, 91, 92 என்றால் கிழித்த மொத்தத் தாள்கள் எத்தனை?

அரவிந்த்

விடைகள்

© TamilOnline.com