துணுக்கு: வாயில் புடவை
நண்பர் ஒருவரது வீட்டிற்குச் சென்றிருந்தார் கி.வா.ஜ. மாடி அந்த வீட்டில் இல்லாததால் நண்பரது மனைவியின் சேலை வாசல் கதவில் உலர்ந்து கொண்டிருந்தது.

"இது என்ன புடவை?" என்று கேட்டார் நண்பரிடம் கி.வா.ஜ.

"இதுவா... சாதாரணப் புடவைதான்" என்றார் நண்பர்.

"இல்லை இல்லை... இந்தப் புடவைக்கு ஒரு விசேஷம் உண்டு. இதுதான் உண்மையான வாயில் புடவை!" என்றார் கி.வா.ஜ.

© TamilOnline.com