ஜெயமுண்டு பயமில்லை


சிந்துநதிப்பூ, சேரன் சோழன் பாண்டியன் ஆகிய படங்களை இயக்கிய செந்தமிழன், செந்தமிழ் எனும் பெயரில் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் புதிய படம் ஜெயமுண்டு பயமில்லை. சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவக் குப்பத்தையும், அவர்களது போராட்டத்தையும் அடிப்படையாகக் கொண்டது இப்படம். அவ்வாறு பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மீனவர் மருத்துவக் கல்லூரியில் படிக்கிறார். அவரது வாழ்க்கையில் இரண்டு மாணவிகள் குறுக்கிடுகின்றனர். அவர்களில் அவர் யாரைத் திருமணம் செய்து கொள்கிறார், ஏன் என்பதுதான் படத்தின் கதை. ஆதித்யா அன்பு கதாநாயகன், தேவிகா கதாநாயகி. மற்றொரு நாயகி பிரியங்கா. பூவரசன் என்பவர் இசையமைக்கிறார். முதன்முறையாக இயக்குநர் டி.பி.கஜேந்திரன் இப்படத்தில் இரட்டை வேடத்தில் தோன்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரவிந்த்

© TamilOnline.com