தேனியில் வீசும் ‘தென்மேற்கு பருவக்காற்று’


'கூடல் நகர்' பட இயக்குனர் சீனுராமசாமி இயக்கும் புதிய படம் தென்மேற்கு பருவக்காற்று. புதுமுகங்கள் சேது, வசுந்தரா ஆகியோருடன் சரண்யா, எழுத்தாளர் அஜயன்பாலா ஆகியோர் இதில் நடிக்கின்றனர். தேனி, கம்பம் பகுதி மக்களின் வாழ்க்கையை, பாசப்பிணைப்பைச் சொல்லும் யதார்த்தமான படம் இது. அந்தந்தப் பகுதிகளில் வாழும் மக்களையே கதைக்கு ஏற்ப கதாபாத்திரங்களாக நடிக்க வைத்திருக்கிறோம். தமிழ் சினிமாவின் சிறந்த கிராமத்துப் பதிவுகளில் இந்தப் படமும் முக்கியப் பங்கு வகிக்கும் என்கிறார் இயக்குநர். இசை: கார்த்திக்ராஜா. ஒளிப்பதிவு: செழியன்.

அரவிந்த்

© TamilOnline.com