அட்லாண்டாவில் குடும்பவியல் கருத்தரங்கம்
2010 ஏப்ரல் 30 வெள்ளிக்கிழமை மாலை முதல் மே 2 ஞாயிறு மதியம் வரை அட்லாண்டா தமிழ் சபையில் குடும்பவியல் கருத்தரங்கம் ஒன்று நடைபெறும். இதில் இங்கிலாந்திலிருந்து வரும் போதகர் ஆபிரகாம் ஜான் சிறப்புப் பேச்சாளராகப் பங்கேற்பார். பிள்ளைகளைப் பற்றிய பதட்டம், குடும்பத்தில் பிரிவினை, மணமுறிவு, கலாச்சாரக் குழப்பம் என்று இவற்றை நீக்கி குடும்பத்தில் ஆசிர்வாத மழை பெறுதல், வாழ்க்கையை ஆன்மீக அடிப்படையில் அமைத்துக் கொள்ளுதல் போன்றவை இங்கே தெளிவுபடுத்தப் படும்.

போதகர் ஆபிரகாம் ஜான் இங்கிலாந்து, ஐரோப்பா, ரஷ்யா, ஜப்பான் மற்றும் ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து இது போன்ற கருத்தரங்குகளை நடத்தி வருகிறார். லண்டனில் உள்ள உலக கிறிஸ்தவ ஐக்கியம் சபையின் போதகராக இருந்து வருகிறார். தீர்க்கதரிசனம் மற்றும் ஆவிக்குரிய சுகமளிக்கும் வரங்களைப்பெற்றவர் இவர். வியாபார முன்னேற்றத்திற்கென்று வியாபாரிகளுக்காக நடைமுறைப் பயிற்சியும் செயல்முறை வழிகளும் அளித்து அவர்கள் வெற்றியுள்ளவர்களாக மாற உதவியிருக்கிறார்.

மேலும் விபரங்களுக்கு
சபையின் இணையதளம்: www.atlantatamilchurch.org
மின்னஞ்சல்: pastor@atlantatamilchurch.org

போதகர் பால்மர் பரமதாஸ்

© TamilOnline.com