குரங்காசிரியர்!
நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது இது நடந்தது:

மாணவர்கள் சிலர் ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருந்தோம். அங்கே ஒரு குரங்கு வந்து எங்களுக்கு எதிரே அமர்ந்தது. நாங்கள் அதைப் பார்க்க, அது எங்களைப் பார்க்க... அந்த நேரம் பார்த்து, அந்தப் பக்கமாக வந்த பேராசிரியர் ஒருவர் எங்களையும், குரங்கையும் சேர்த்துப் பார்த்துவிட்டு ஒரு கேள்வி கேட்டார்.

"என்னப்பா நியூ அட்மிஷனா?" (புதிதாய் வந்த மாணவனா?) என்று கேட்டார். உடனே எங்களோடு இருந்த ஒரு மாணவன் எழுந்து பணிவாக, "இல்லை சார் நியூ அப்பாயின்மெண்ட்!" (புதிதாய் வந்த ஆசிரியர்) என்றான்.

பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் பேச்சில் கேட்டது

© TamilOnline.com