தெரியுமா?: மாட்டு வண்டியிலிருந்து பீரங்கி வண்டிக்கு
பொட்டல்பட்டி குக்கிராமத்தில் பிறந்த மணியம் பத்தாம் வகுப்பில் முதலாவதாகத் தேறினார். ஆனால், குடும்ப வறுமை காரணமாக மாட்டு வண்டிப் பட்டறையில் வேலைக்குப் போக வேண்டியதாயிற்று. ஆசிரியர்கள் கொடுத்த உதவியும் ஊக்கமும் இவரை சென்னையில் பி.ஈ., புனேயில் எம்.ஈ. படிக்க வைத்தன. இப்போது இவர் பணிபுரிவது சென்னை ஆவடியில் உள்ள போர் வாகன ஆராயச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தில் தொழில்நுட்ப அதிகாரியாக. ராஜஸ்தானத்தில் அர்ஜுன் டேங்க் உள்ளிட்ட பிற சாதனங்களைச் சோதிப்பதிலும் அவற்றைப் பயன்படுத்த ராணுவத்தினருக்குப் பயிற்சி கொடுப்பதிலும் இவருக்குப் பெரும்பங்கு உண்டு. இந்தத் துறையில் சாதனை படைத்ததற்காக இவருக்கு தேசிய விருது தரப்பட்டுள்ளது. இதனை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி வழங்கினார்.



© TamilOnline.com