நார்வாக்கில் ஸ்ரீ மஹாருத்ரம்
தென்கலிஃபோர்னியாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சக்ரேஸ்வரி மிஷனுடன் லாஸ் ஏஞ்சலஸ் ஸ்ரீ காஞ்சி காமகோடி மையம், சனாதன தர்ம ஆலயம் ஆகியவை இணைந்து மஹாருத்ரம் ஒன்றை நடத்த உள்ளனர். நார்வாக்கில் (Norwalk) உள்ள சனாதன தர்ம ஆலயத்தில் 2010 மே 29-31 தேதிகளில் வரும் நினைவுநாள் வார இறுதியில் இது நடக்கும். இந்திய மற்றும் பிற சமுதாயங்களின் நலமும், சமாதான சகவாழ்வும் வேண்டி இது நடத்தப்படுகிறது. மே 30ம் தேதியன்று நடைபெறும் மஹாருத்ர ஜபம் மற்றும் யக்ஞத்தில், அமெரிக்காவின் பல பகுதிகளிலிருந்தும் 140க்கும் மேற்பட்ட ரித்விக்குகள் பங்கேற்பர்.

பங்கேற்க விரும்பும் ரித்விக்குகள், ஒருங்கிணைப்பாளர்களுடன் இந்த மின்னஞ்சல் முகவரிகளில் தொடர்பு கொள்ளவும்: admin@srichakreswari.org, maharudramla@yahoo.com



© TamilOnline.com