சிகாகோவில் 'நாட்யா டான்ஸ்' நிகழ்ச்சி

ஜனவரி 23, 2010 அன்று க்ரேஸ் லேக் இந்துக் கோயிலின் வளர்ச்சி நிதிக்காக லேக் கௌண்டி கல்லூரி வளாகத்தில் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. டாக்டர் மாதங்கி சேகரனின் வரவேற்புரையுடன் விழா துவங்கியது. 'நாட்டியா டான்ஸ்' நிறுவனத்தின் இயக்குநர் திருமதி ஹேமா ராஜகோபாலன் அவர்கள் நடன வடிவமைத்த, ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களுக்கு நடனமணிகள் சிறப்பாக நடனமாடினர். நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறக் காரணமாக இருந்த அனிதா சங்கர், ஜோதி அருள், மது குமார், டாக்டர் மாதங்கி சேகரன், சின்னச்சாமி ஆறுமுகம், குமார் நடேச அய்யர் ஆகியோர் நன்றிக்குரியவர்கள்.

குமார் அவர்கள் நன்றி கூற விழா நிறைவடைந்தது.



© TamilOnline.com