தெரியுமா?: என் லட்சியம் முயன்று பார்ப்பதே
இப்போது நான் பாடுகிறேன். இது என் பாணி என்றோ, இது ஒரு புதிய சம்பிரதாயம் என்றோ நான் யாரிடமும் எப்போதும் சொன்னதில்லை. சில புதுமைகளை முயன்று பார்க்க ஆசைப்படுகிறேன். அப்படி முயன்று பார்ப்பதில் தப்பில்லை என்று நம்புகிறேன். எனவே முயல்கிறேன். மக்களுக்கு இது பிடித்துப் போய் எதிர்காலத்தில் சிலர் இது போலவே பாடி, அது மேலும் மேலும் பரவினால் இதுவும் ஒரு சம்பிரதாயம் என்றாகி விடும். என் லட்சியம் முயன்று பார்ப்பதே தவிர வேறில்லை.

- டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா

© TamilOnline.com