'காவலர் குடியிருப்பு'
'குப்பி' படம் மூலம் பிரபலமான ஏ.எம்.ஆர். ரமேஷ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் புதிய படம் 'காவலர் குடியிருப்பு'. புதுமுகங்கள் அனீஸ் தேஜஸ்வர் நாயகனாகவும் ஸ்ருதி நாயகியாகவும் இதில் அறிமுகம். சரண்யா, திலிப்ராஜ், அவினாஷ் ஆகியோர் உடன் நடித்துள்ளனர். மூன்று காலகட்டங்களில் நடக்கும் கதையை ஒளிப்பதிவாளர் துவாரகநாத் தனித்தனி வண்ணங்களில் படமாக்கி உள்ளார். இசை ஜேம்ஸ் வசந்தன். பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது பெங்களூரில் நடந்த கலவரத்தையும், அதில் காதலால் இணைந்த இரு உள்ளங்களைப் பற்றியுமான கதைதான் 'காவலர் குடியிருப்பு'.

அரவிந்த்

© TamilOnline.com