லெமான்ட் கோவிலில் தங்கமுருகன் விழா
டிசம்பர் 12, 2009 அன்று சிகாகோ பெருநகர் லெமான்ட் ஹிந்துத் திருக்கோவிலில் தங்கமுருகன் விழா முழுநாள் விழாவாகக் காலை 9:30 மணிமுதல் தொடங்கிக் கொண்டாடப்படும். இதில் இசைக் கல்லூரி ஆசிரியர்களும் மாணவர்களும் பங்கேற்பர். பிரபல பாடகர் சி.எஸ். ஐங்கரன், அனிதா கிருஷ்ணன் ஆகியோர் மெல்லிசை வழங்குவர். வழக்கம்போல ஆடையலங்கார அணிவகுப்பும் உண்டு. அனுமதி இலவசம்.

தொடர்பு கொள்ள: 630.972-0300

© TamilOnline.com