சசிகுமாரின் 'நகரம்'
நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என்று பல துறைகளிலும் சாதித்துக் கொண்டிருக்கும் இயக்குநர் சசிகுமார் அடுத்து இயக்க இருக்கும் படம் 'நகரம்'. இதில் முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் சமுத்திரக்கனி நடிக்கிறார். அவரைத் தவிர படத்தில் நடிக்கும் அனைத்துக் கதாபாத்திரங்களும் புதுமுகங்கள். இப்படம் முழுக்க முழுக்கச் சென்னை மற்றும் அதன் பின்னணியில் உருவாகவிருக்கிறது. நகர வாழ்வின் அவலங்களும் அனுகூலங்களும் படத்தில் இடம்பெற உள்ளதாம்.

அரவிந்த்

© TamilOnline.com