மிசெளரி தமிழ்சங்கம்: பொங்கல் விழா
பிப்ரவரி 18, 2006 அன்று மிசெளரி தமிழ்ச் சங்கம் பொங்கல் விழாவைக் கொண்டாடியது. சர்க்கரைப் பொங்கலுடன் கூடிய அறுசுவை உணவுக்குப் பின் வரவேற்புரையுடன் விழா தொடங்கியது. முப்பத்தைந்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கு கொண்ட 'பொங்கலோ பொங்கல்' என்ற இந்நிகழ்ச்சி தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், ஜல்லிக்கட்டு, காணும் பொங்கல் எனப் பல்வேறு பிரிவுகளாகத் தொகுக்கப்பட்டு இருந்தது. நடனம், பாடல்கள், நாடகம் மூலம் இவற்றை சித்தரித்தனர். நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக அமைந்தது ஆண்களின் 'ஓயிலாட்டம்'. பங்குபெற்றவரின் ஆடை அலங்காரம் காண்போரை வியப்பில் ஆழ்த்தியது. தொடர்ந்து சிறப்புரை, சொல் விளையாட்டு ஆகியவையும் விழாவிற்குச் சுவை கூட்டியது. இறுதியில் நடந்த 'ஜோடிப் பொருத்தம்' போட்டியில் பங்குகொண்ட தம்பதியினர் மாற்றி, மாற்றிப் பதில் கூறி அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தினர். நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவடைந்தது.

உமையாள் நாராயணன்

© TamilOnline.com