டைகருக்கு எத்தனை கட்டை?
மைசூர் சமஸ்தான வித்வான் டைகர் வரதாச்சாரி என்றால் அந்த காலத்தில் பக்க வாத்தியக்காரர்களுக்குச் சிம்ம சொப்பனம். நான்கு, ஐந்து மணி நேரம் தொடர்ச்சியாகப் பாடி அவர்கள் கையை ஒடித்துவிடுவார். அதற்கு ஏற்றாற்போல் அவரது உருவமும் ஆஜானுபாகுவாக இருக்கும். ஒருமுறை இவரைப்பற்றித் தெரியாத புதிய ஆர்மோனியக்கார்ர் ஒருவர் இவரிடம் "உங்களுக்கு எத்தனை கட்டை வைக்க வேண்டும்" என்று கேட்டார். அதற்கு டைகர் "ஒடம்பு கொஞ்சம் பெரிசுபா. ஒரு ஒண்ணரை டன் கட்டை வேண்டியிருக்கும்னு நெனைக்கிறேன்" என்றாரே பார்க்க வேண்டும்.

சந்திரசேகர்,
எவர்கிரீன், கலிஃபோர்னியா

© TamilOnline.com