தனி வாசிப்பு!
மகாராஜபுரம் சந்தானம் அவர்கள் ஒரு சமயம் வெளியூரில் கச்சேரிக்குப் போயிருந்த போது அவரது வயலின் வித்வானுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. எனவே உள்ளூர் வயலின் வித்வான் ஒருவரை அமர்த்தினர். கச்சேரி முடியும் தறுவாயில் உள்ளூர்க்காரர் ஒருவர் எழுந்து "ஐயா நம்ம வயலின்காரரைக் கொஞ்ச நேரம் தனியா வாசிக்க அனுமதிக்கணும்" என்றார். உடனே மகாராஜபுரம் "இவ்வளவு நேரமும் அவர் அதைத்தானே செய்து கொண்டிருந்தார்" என்று கூறிச் சுற்றியிருந்தோரைச் சிரிப்பில் ஆழ்த்தினார்.

சந்திரசேகர்,
எவர்கிரீன், கலிஃபோர்னியா

© TamilOnline.com