பால் கசக்கிறதோ
புலவர் ஒருவர் சிலேடைக்குப் பேர் போனவர். அவர் மரணப் படுக்கையில் இருந்த போது அவரது நண்பர் ஒருவர் பாலைத் துணியில் நனைத்து அவரது வாயில் பிழிந்தார். புலவர் போதும் என்று சைகை காட்டினார். நண்பர் "பால் கசக்கிறதோ" என்று கேட்க அவர் "பாலும் கசக்கவில்லை, பிழிந்த துணியும் கசக்கவில்லை" என இரட்டைப் பொருளில் கூறினார்.

சந்திரசேகர்,
எவர்கிரீன், கலிஃபோர்னியா

© TamilOnline.com