வீரசோழன்
ஸ்ரீமுத்துமாரியம்மன் பிலிம்ஸ் தயாரிக்கும் புதிய படம் 'வீரசோழன்'. இந்தப் படத்தில் புதுமுகம் அஜய்குமார் அறிமுகமாகிறார். 'வள்ளுவன் வாசுகி' ஸ்வேதா கதாநாயகி. பிரிந்து கிடக்கும் கிராமத்தை, பிரிந்து போன நண்பர்கள் இணைந்து எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதுதான் படத்தின் கதை. 'சிவகங்கை' மாவட்டத்தில் உள்ள வீரசோழன் என்ற கிராமத்தில் நடந்த உண்மைச் சம்பவம் தான் படத்தின் கதை என்பதால் படத்திற்கு அதையே தலைப்பாக வைத்திருக்கிறார்கள். மனிதநேயத்துடன் வாழ்ந்தால் கிராமம் மட்டுமல்ல; உலகமே ஒற்றுமையுடன் வாழலாம் என்பதுதான் படத்தின் கரு என்கிறார் இயக்குநர் அன்புசரவணன். கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்கும் இவர், ராம. நாராயணனிடம் உதவியாளராகப் பணியாற்றியவர். பாடல்களைப் பிறைசூடன், பழனிபாரதி, யுகபாரதி ஆகியோர் எழுத, இசையமைக்கின்றார் விஜய் சர்மா.

அரவிந்த்

© TamilOnline.com