நல்லவேளை, தப்பித்தேன்!
முல்லா ஒரு கழுதையைச் செல்லமாக வளர்த்து வந்தார். திடீரென ஒருநாள் அது காணாமல் போய்விட்டது. வேலையாட்கள் பல இடங்களிலும் தேடினர். ஆனாலும் கழுதையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. உடனே அவர்கள் சோகத்துடன் அந்தச் செய்தியை முல்லாவிடம் தெரிவித்தனர்.

"அப்பாடா... ரொம்ப நல்லதாய்ப் போய்விட்டது" என்றார் முல்லா.

"அய்யா, நம் கழுதை காணாமல் போய் விட்டதென்கிறோம். எப்படி நீங்கள் அதை நல்லதென்று சொல்கின்றீர்கள்?" என்று வேலையாட்கள் கேட்டனர்.

"ஆமாம், வழக்கம்போல் நான் அதன்மேல் சவாரி போயிருந்தால் நானும் அல்லவா சேர்ந்து காணாமல் போயிருப்பேன்! நல்லவேளை, பிழைத்தேன்" என்றார் முல்லா.



© TamilOnline.com