இம்மைக்கும் அம்மைக்கும்...
வாகீச கலாநிதி எனப் போற்றப்பட்டகி.வா. ஜகந்நாதன். சிறந்த தமிழறிஞர், பத்திரிகையாளர், எழுத்தாளர், ஆய்வாளர், கவிஞர். தமிழ்த்தாத்தா டாக்டர் உ.வே.சா.வின் மாணவர். இவரது சிலேடைகள் மிகவும் பிரபலம்.

ஒருமுறை இம்மை-மறுமை என்ற தலைப்பில் சொற்பொழிவாற்ற அவர் அழைக்கப்பட்டிருந்தார். அவர் உரையாற்ற ஆரம்பித்த சற்று நேரத்தில் மைக் கோளாறாகி விட்டது. அதை அகற்றிவிட்டு வேறு மைக் வைத்தார்கள். அதுவும் சிறிது நேரத்தில் சரியாகச் செயல்படவில்லை. கி.வா.ஜ. உடனே "இம்மைக்கும் சரியில்லை, அம்மைக்கும் சரியில்லை" என்று, பேசவிருந்த தலைப்பிற்கு ஏற்றவாறு சிலேடையாகக் கூறினார். வந்திருந்தோர் அவரது சிலேடையை ரசித்துச் சிரித்தனர்.



© TamilOnline.com