சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 'அரண்'
சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தார் ஜீவா நடிப்பில் 'ஈ' என்ற படத்தைத் தயாரித்து வருகின்றனர். படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் இருப்பதால், அடுத்த படத்திற்கான பூர்வாங்கப் பணிகளை இந்நிறுவனம் தொடங்கியுள்ளது.

'அரண்' என்று பெயரிடப்பட்டிருக்கும் அடுத்த படத்தில் மலையாள நடிகர் மோகன்லால் மற்றும் ஜீவா இருவரும் சேர்ந்து நடிக்கவிருக்கிறார்கள். நாயகிகளாக நடிக்கப் போவது கோபிகாவும் மம்தா என்கிற புதுமுகமும். இசையை ஜோஸ்வா ஸ்ரீதர் கவனிக்கிறார்.

இயக்குநர் பிரியதர்ஷனிடம் உதவியாள ராகப் பணியாற்றிய மேஜர் ரவி படத்தை இயக்குவதோடு, கதை, திரைக்கதை, வசனத்தையும் கவனிப்பார். ரமேஷ்கண்ணா மற்றும் முக்கிய வேடம் ஒன்றில் ரீமாசென் ஆகியோர் தோன்றுவர்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com