சமையல் தந்திரங்கள்
* சாம்பார் நல்ல நிறமாக இருக்க, ஒரு தக்காளியை மிக்ஸியில் அரைத்து சாம்பாருடன் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.

* ரசம் கொதித்து வரும்போது நன்றாகப் பொடித்த மிளகு, சீரகம் கலந்த பொடி ஒரு ஸ்பூன் தூவி இறக்கவும். மணமும் சுவையும் ஊரைக் கலக்கும்.

* வெண்டைக்காய் பொரியல் உதிரியாக வர வேண்டுமா? வெண்டைக்காய் பாதி வதங்கியவுடன் உப்பு சேர்த்து பின் இறுதியில் பொட்டுக் கடலை, பச்சை மிளகாய், கொத்தமல்லித் தழை மூன்றையும் மிக்ஸியில் பவுடராக்கி, பொரியலில் தூவி இறக்கவும்.

* ரவா கேசரி செய்யும்போது தண்ணீருக்கு பதில் பாலைச் சேர்த்துக் கிளறினால் வித்தியாசமான சுவையுடன் மிக நன்றாக இருக்கும்.

* இட்லி பூப்போல வர வேண்டுமா? அரிசி, உளுந்து இரண்டையும் ஃப்ரிட்ஜில் மூன்றுமணி நேரம் ஊற வைத்து, பின் அந்தக் குளிர்ந்த நீரையே பயன்படுத்தி மாவு அரைத்தால் இட்லி மெத்து மெத்தென்று இருக்கும்.

* குக்கரில் சாதம் வைக்கும்போதே பாத்திரத்தின் மேல் தட்டில் புளியை ஒரு சிறு கிண்ணத்தில் வைத்துவிட்டால் புளி கரைக்க சுலபமாக இருக்கும்.

ராதா மோகன், டெக்ஸாஸ்

© TamilOnline.com