மலிபூ கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா
ஜூலை 25, 2009 சனிக்கிழமை அன்று லாஸ் ஏஞ்சலஸ் மலிபூ கோவிலில் கோதை நாச்சியாரின் திரு அவதார தினமான ஆடிப்பூரம் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. காலை 10 மணிக்குப் பெருமாளுக்கும் ஆண்டாளுக்கும் திருமஞ்சனம் நடைபெறும். மாலை 3 மணிக்குத் திருக்கல்யாண உத்சவம் நடைபெறும். பின்னர் ஏகாந்த சேவை நடைபெறும்.

காலை 8 மணிக்கு சுப்ரபாதத்தில் தொடங்கி, திருவாராதனம், கலச ஸ்தாபனம், புண்யாகவசனம், திருமஞ்சனம், மங்களாசாசனம், சாற்றுமுறை, ரதயாத்திரை என்று நாள்முழுவதும் பல நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாள், கோதைப் பிராட்டியார் திருவருளைப் பெறவேண்டும்.

நரசிம்ஹ பட்டர்

© TamilOnline.com