‘மத்திய சென்னை'யில் பிரகாஷ் ராஜ்
ராப்டர் மீடியா தயாரித்துள்ள புதிய படம் மத்திய சென்னை. புதுமுக நாயகன் ஜெய்வந்த் கதாநாயகனாக நடிக்கிறார். உடன் நாயகியாக ரம்யா பார்னா அறிமுகமாகிறார். இவர்களுடன் சார்லி, கஞ்சா கருப்பு ஆகியோர் நடித்துள்ளனர். முக்கியமான மாறுபட்ட வேடத்தில், குருதத் என்னும் இயக்குநராக நடிக்கிறார் பிரகாஷ்ராஜ். மத்திய சென்னையில் உள்ள ஒரு குப்பத்தில் நடக்கும் கதை இது. பாதிப்புக்குள்ளாகும் குப்பத்தை மீட்பதற்காக நாயகன் நடத்தும் போராட்டமும், அதன் பின்னணியும் தான் படத்தின் கதை. பாடல்களை வாலி, மு. மேத்தா, பழனிபாரதி, நா. முத்துக்குமார் ஆகியோர் எழுதியுள்ளனர்.

அரவிந்த்

© TamilOnline.com