சின்மயா மிஷன் ஆல்ஃபரட்டா தமிழ் மையம் நான்காம் ஆண்டு நிறைவு விழா
மே 16, 2009 அன்று சின்மயா மிஷன் ஆல்ஃபரட்டா தமிழ் மையத்தின் ஆண்டுவிழா ஜோன்ஸ்கிரீக் ஸ்பிருல் ஓக்ஸ் நூலகத்தில் நடைபெற்றது. மையப் பொறுப்பாளர் சுந்தரி குமார் வரவேற்புரை வழங்கினார்.

மையத்தின் ஆசிரியர்கள் அபர்ணா பாஸ்கர், கீதா ஹரி, மங்களா அய்யர், நந்தினி அராஸ் கண்ணு தம்பதிகள் ஆகியோர் குழந்தைகளுக்குத் தமிழில் பாட்டு, நடனம், கலந்துரையாடல், நாடகம் மற்றும் சிரிப்பு நிகழ்ச்சி எனப் பயிற்சி அளித்து மேடையேற்றினர்.

விழாவிற்கு குப்புசாமி அய்யா, அட்லாண்டா பெருநகரத் தமிழ்ச் சங்கத் தலைவர் சந்திரசேகர் குப்புசாமி, செயளாலர் ரவி பழனியப்பன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டதோடு குழந்தைகளுக்குச் சான்றிதழ் மற்றும் நினைவுக் கேடயம் வழங்கினர்.

தமிழ்ச் சங்க நிர்வாகக் குழு உறுப்பினர் வித்யா ரமேஷ் அடுத்த கல்வி ஆண்டுக்காண புத்தகங்களைப் பெற்றோர்களின் பார்வைக்கு வைத்திருந்தார். மையத்தின் பொருளாளர் ராஜா வேணுகோபால் நன்றியுரை கூற விழா நிறைவுற்றது.

© TamilOnline.com