காலால் எழுதும் கல்விச் செல்வி
உடல் நலத்துடன் இருப்பவர் பலரே சோம்பித் திரியும் இக்காலத்தில், ஏழை கிராமத்துச் சிறுமி வித்யாஸ்ரீ கால்களால் தேர்வு எழுதி சாதனை படைத்திருக்கிறார். விழுப்புரத்தை அடுத்த ஆற்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை. சாதாரண விவசாயி. மகள் வித்யாஸ்ரீ (16). இரு கைகளும் இல்லாதவர். சமீபத்தில் நடந்த எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில், தனது இடது கால் விரல்களைப் பயன்படுத்தி தேர்வெழுதினார். இதில் குறிப்பிடத்தக்க விஷயம், தேர்வெழுதும் நேரத்தில் இவருக்குச் சலுகை எதுவும் இல்லை. அதே குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வெழுதி முடித்தார் என்பதுதான். வித்யாஸ்ரீ 70 சதவீத மதிப்பெண்களோடு வெற்றி பெற்றிருக்கிறார். வித்யாஸ்ரீ என்றாலே கல்விச் செல்வம்தானே!

அரவிந்த்

© TamilOnline.com