ஒளியும் ஒலியும்
ராஜூ வெங்கட்ராமனும், சிவகுமார் பாலசுப்பிரமணியனும் அமெரிக்காவாழ் இந்தியர்கள். அவர்கள் இருவரும் இணைந்து தண்டினி கிரியேஷன்ஸ் எனும் பட நிறுவனம் மூலம் உருவாக்கி வரும் படம் 'ஒளியும் ஒலியும்'. இது 1947ல் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாக நடந்த கதையை உள்ளடக்கியது. புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் கீதா, பிறவியிலேயே உடல் குறைபாடுள்ளவர். மற்றுமொரு முக்கியமான விஷயம் சமூக ஆர்வலரும், அன்பு பாலம் என்னும் அமைப்பின் மூலம் மக்கள் நலப்பணி ஆற்றி வருபவருமான பாலம் கலியாணசுந்தரம், இப்படத்தில் முக்கியமான வேஷத்தில் நடித்து வருகிறார் என்பது தான். இயக்குனர் சக்திசெல்வம் சட்டக் கல்லூரி மாணவர்.

அரவிந்த்

© TamilOnline.com