மௌனம் கலைக்கப்படும் போது...
கரண் முற்றிலும் மாறுபட்ட வித்தியாசமான வேடத்தில் நடிக்க இருக்கும் படம் 'கனகவேல் காக்க'. சரண், ஹரி ஆகியோரிடம் இணை இயக்குனராகப் பணியாற்றிய கவின்பாலா இப்படத்தை இயக்குகிறார். ஆகர்ஷ்னி தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ஆர். சரவணா இப்படத்தைத் தயாரிக்கிறார். கதாநாயகியாக ஹரிப்ரியா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். மற்றும் கோட்டா சீனிவாசராவ், ராஜ்கபூர், சம்பத்ராஜ், பிரகாஷ், பாண்டு, வையாபுரி, தேவதர்ஷினி, ஆதித்யா, அவினாஷ் ஆகியோரும் நடிக்கின்றனர். தமிழ் சினிமாவில் எந்தக் கதாநாயகனும் இதுவரை நடிக்காத கதாபாத்திரமாம் கரணுக்கு. ஆயுதத்திலேயே மிகப்பெரிய ஆயுதம் மௌனம்தான். அந்த மௌனம் கலைக்கப்படும்போது ஏற்படும் விளைவுகளைக் கூறுவதுதான் இந்தப்படமாம். இசை: விஜய் ஆண்டனி. பத்திரிகையாளரும், பிரபல எழுத்தாளருமான பா. ராகவன் இப்படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறார்.

தொகுப்பு: அரவிந்த்

© TamilOnline.com