சந்திரன் ஜீவரட்ணம்
ஜூலை 24, 2008 அன்று, நோவியில் (மிச்.) வசித்துவந்த சந்திரன் ஜீவரட்ணம் அவர்கள் டொராண்டோவில் நடந்த கார் விபத்து ஒன்றில் மரணமடைந்தார். ஸ்ரீலங்காவைச் சேர்ந்த இவர் அமெரிக்கா வருவதற்கு முன் இந்தியாவில் பல ஆண்டுகள் வசித்து வந்தார். ஜெனரல் மோட்டார்ஸில் பொறியியலாளராகப் பணிபுரிந்து வந்தார். இவருக்கு ஒரு மனைவியும் இரண்டு மக்களும் உள்ளனர். Vani Foods நிறுவனத்தின் உரிமையாளரான இவருக்குக் கிரிக்கெட் விளையாடப் பிடிக்கும். தென்றலின் தீவிர வாசகர், ஆதரவாளர், விளம்பரதாரர். தென்றல் குடும்பத்து உறுப்பினரான சந்திரன் ஜீவரட்ணத்தின் மறைவுக்குத் தென்றல் தனது அஞ்சலிகளைத் தெரிவிக்கிறது.

தகவல் உதவி: அரவிந்த் ரமேஷ்

© TamilOnline.com