திருநெல்வேலி விஸ்வநாதன்
ஜூலை 16, 2008 அன்று டி.கே. விஸ்வநாதன் (81) அவர்கள் போகாரேடனில் (ஃப்ளோ.) உயிர்நீத்தார். தென்றலில் 'திருநெல்வேலி விஸ்வநாதன்' என்ற பெயரில் பல விமர்சனங்களையும் கட்டுரைகளையும் வழங்கியுள்ளார். சிவில் எஞ்சினியரான இவர் தமிழகப் பொதுப்பணித்துறையில் முதன்மைப் பொறியாளராக ஓய்வுபெற்றார். அவருக்கு 2 மகன்களும், 4 பேரக் குழந்தைகளும் உள்ளனர். டி.கே விஸ்வநாதன் அவர்களின் மறைவுக்குத் தென்றல் தனது மனமார்ந்த அஞ்சலிகளைத் தெரிவிக்கிறது.

தகவல் உதவி: அரவிந்த் ரமேஷ்

© TamilOnline.com