லாரன்ஸின் மனிதநேயம்
நடன நிபுணர், திரைப்பட இயக்குநர், நடிகர் என பன்முகம் கொண்டவர் திரைப்பட நடிகர் ராகவா லாரன்ஸ். ஆதரவற்ற அநாதைக் குழந்தைகளைத் தனது வீட்டில் தங்க வைத்துவிட்டு, தான் வாடகை வீட்டில் குடியேறியிருக்கிறார். இருதய நோயால் பாதிக்கப்பட்ட அக்குழந்தைகளின் அறுவை சிகிச்சைக்குப் பொதுமக்களிடம் நிதி திரட்டி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புணி ராமதாஸின் உதவியுடன் அனைத்துக் குழந்தைகளுக்கும் இருதய அறுவை சிகிச்சை சமீபத்தில் ஜிப்மர் மருத்துவமனையில் நடந்தேறியது. அதனைத் தொடர்ந்து தற்போது தெருவில் அநாதைகளாகச் சுற்றித் திரிந்த ஏழைக் குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் தேவையான தங்குமிடம், உணவு, கல்வி என அனைத்தையும் லாரன்ஸ் அறக்கட்டளை மூலம் செய்து தரத் திட்டமிட்டிருக்கிறார். ராகவா லாரன்ஸின் முயற்சி பாராட்டத்தக்கது.

இணையதளம்: www.larenccecharitabletrust.com
மின்னஞ்சல் முகவரி: larenccecharitabletrust@yahoo.com

அரவிந்த்

© TamilOnline.com