கணிதப் புதிர்கள்
1. ஒன்று முதல் ஒன்பது வரையான எண்கள் மீண்டும் வராமல், அவற்றைச் சிற்றிலக்கங்களாகக் கொண்ட எண்களைக் கூட்டியோ, கழித்தோ, பெருக்கியோ, வகுத்தோ கூட்டுத்தொகை நூறு வருமாறு செய்ய வேண்டும். முடியுமா?

2. ஒருவரிடம் மொத்தம் 8100 டாலர் பணம் இருந்தது. அதில் மூன்றில் ஒரு பங்கை முதல் மகனுக்குப் பிரித்துக் கொடுத்தார். மீதித் தொகையில் மூன்றில் ஒரு பங்கை இரண்டாவது மகனுக்குப் பிரித்துக் கொடுத்தார். இவ்வாறு அவர் தொடர்ந்து தனது மகன்களுக்குப் பிரித்துக் கொடுத்தது போக எஞ்சிய 1600 டாலரை, தனது ஒரே பேரனுக்குக் கொடுத்தார் என்றால், அவருடைய மகன்களின் எண்ணிக்கை என்ன, ஒவ்வொருவருக்கும் கொடுத்த தொகை எவ்வளவு?

3. ராமுவிடம் சில புத்தகங்கள் இருந்தன. அவன் அவற்றை முறையே 3 புத்தகங்கள் வீதம் அடுக்கியதில் ஒரு புத்தகம் எஞ்சியது. அவ்வாறே 4, 5, 6 என அடுக்கினாலும் ஒரு புத்தகம் எஞ்சியது. ஆனால் 7 புத்தகமாக அடுக்கியதில் எதுவுமே மீதம் இருக்கவில்லை. அப்படியென்றால் ராமுவிடம் இருந்த புத்தகங்களின் எண்ணிக்கை எவ்வளவு?

4. 4736 - இந்த எண்ணுடன் எந்த எண்ணைச் சேர்த்தால் இது சதுர எண்ணாக மாறும்?

அரவிந்தன்

விடைகள்

© TamilOnline.com