டெலவர் வேலி பெருநிலத் தமிழ்ச் சங்கத்தின் தமிழ்த் தேனீ மற்றும் திருக்குறள் போட்டி
மே 10, 2008 அன்று TAGDVயின் சார்பாக பிலடெல்பியா அருகிலுள்ள அனைத்துத் தமிழ் மக்களுக்காக வில்லநோவா கல்லூரியில் திருக்குறள் போட்டியும், தமிழ்த் தேனீ எழுத்துப் போட்டியும் நடந்தன. நடுவர்களாக சிவக்குமார், வாசு, சூரி ஆகியோர் பணியாற்றினர்.

திருக்குறள் போட்டியில் மாணவர்கள் குறள்களைப் பொருள் விளக்கத்தோடு சொன்னார்கள். வனிதா மணி என்னும் மாணவி திருக்குறளை இசையோடு பாடியது வெகு அழகு. தமிழ்த் தேனீ எழுத்துப் போட்டியிலும் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

மேலும் விவரங்களுக்குப் பார்க்க: www.tagdv.org

லதா சந்திரமெளலி

© TamilOnline.com