சுஜாதா போனார், பாலகுமாரன் வந்தார்
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் 'ரோபோ' படத்துக்கு வசனம் எழுத சுஜாதா ஒப்புக்கொண்டிருந்தார். அவரது மரணம் இயக்குநர் ஷங்கரைப் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியிருந்தது. இந்த நிலையில் பாலகுமாரன் பெயரை ஷங்கருக்கு ரஜினி சிபாரிசு செய்ய, ஷங்கரும் அதனை ஏற்றுக் கொண்டார். ரஜினி நடித்த படங்களில் முக்கியமான படம் பாட்ஷா. அப்படத்தின் பன்ச் டயலாகுகளை எழுதி அசத்தியவர் பாலகுமாரன். நீண்ட இடைவேளைக்குப் பிறகு 'ரோபோ' படத்தில் பாலகுமாரன் வசனம் எழுதவிருக்கிறார்.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com