வேதாத்திரிய வேள்வி தினம்
மார்ச் 28, 2008 நாளை விரிகுடாப்பகுதி எளிய குண்டலினி யோகத்தின் (Simplified Kundalini Yoga - SKY) உறுப்பினர்கள் வேதாத்திரிய வேள்வி தினமாகக் கொண்டாடினர். ப்ரீமாண்ட் இந்து ஆலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஆலய நிர்வாகிகள் டாக்டர் பவன் சட்டா, டாக்டர் நூதன் சட்டா, நிர்மல் அகர்வால் ஆகியோர் கலந்துகொண்டனர். சென்னை கல்பாக்கத்தில் இருந்து பேரா. வெற்றிவேல், லோகநாயகி ஆகியோரும் வந்திருந்தனர்.

தலைமைவிருந்தினர் விளக்கேற்றி வைக்க, அருள்செல்வி ஹரிணி கடவுள் வாழ்த்துப் பாடினார். ஜெய் கணேஷ் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். பொறுப்பிலிருக்கும் குரு முரளி ஸ்ரீனிவாசன் வரவேற்புரை வழங்கினார். நெடுநாள் சாதகர் நாராயணன் சந்திரசேகர், பிற உறுப்பினர்கள் ரவிகுமார், மணிகண்டன் ஆகியோர் தமது அனுபவங் களையும் மனவளப் பயிற்சியின் முக்கியத் துவத்தையும் குறித்துப் பேசினர். டாக்டர் பவன் சட்டா தியானத்தைப் பற்றிய தமது கருத்துகளைக் கூறியதோடு SKY அமைப்பின் வளர்ச்சிக்கு வாழ்த்துக் கூறினார்.

தொண்டர்கள் மணிகண்டனும் ஹரிணியும் வடிவமைத்துள்ள இணையதளமான www.skybayarea.org இந்தச் சந்தர்ப்பத்தில் தொடங்கிவைக்கப் பட்டது. சிதம்பரம் சாம்பசிவம் நன்றியுரை வழங்கினார்.

ராஜேஷ் சாம்பசிவம்

-

© TamilOnline.com