சர்ச்சையில் குருவி
உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி, விஜய் நாயகனாக நடிக்கும் 'குருவி' என்ற படத்தைத் தயாரித்து வருகிறார். இப்படத்திற்காக பா. விஜய் எழுதிய பாடல் ஒன்று மிகப் பெரிய சர்ச்சையை கிளப்பியது. தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகளின் சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்ற வீராங்கனை தில்லையாடி வள்ளியம்மை. அவரை அவமதிக்கும் வகையில் இப்பாடலில் வரிகள் இடம்பெற்றிருப்பதாகவும் அவற்றை நீக்கக் கோரியும் நெல்லை சுதந்திரப் போராட்டத் தியாகிகள் சங்கம் அறிக்கை விடுத்தது. இதனையடுத்து சர்ச்சைக்குரிய அந்த வரிகள் நீக்கப் பட்டுள்ளது. யாரையும் எதையும் அவமதிக்கலாம், கேள்வி கேட்பாரில்லை என்பது சினிமா மற்றும் அரசியலின் ஏகபோக உரிமையாகி வருகிறது. நல்ல வேளை, சிலவற்றையாவது தட்டிக் கேட்க மக்களுக்கு தைரியம் உண்டாகியிருக்கிறது.

அரவிந்த்

-

© TamilOnline.com