பாரத ரத்னா
இந்திய அரசின் மிக உயர்ந்த சிவிலியன் விருது பாரத ரத்னா. அன்னை தெரசா, எம்.எஸ். சுப்புலட்சுமி, நெல்சன் மண்டேலா, எம்.ஜி.ஆர். உட்பட நாற்பது பேருக்கு இதுவரை இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும், கடந்த ஆறாண்டு காலமாக யாருக்கும் இந்த விருது வழங்கப்படவில்லை. முன்னாள் பிரதமர் வாஜ்பாயிக்கு இந்த விருது வழங்கப்பட வேண்டும் என்று பிரதமருக்கு அத்வானி கடிதம் எழுத, அது புதிய சர்ச்சைக்கு வித்திட்டது. கன்ஷி ராமுக்கு வழங்கக் கோரி மாயாவதியும், ஜோதி பாசுவுக்குத்தான் தர வேண்டும் இடதுசாரிகளும் கருணாநிதியின் சார்பில் தமிழகத்தில் இருந்து குரல்களும் எழுந்தன. சர்ச்சையைத் தவிர்க்க நினைத்த மத்திய அரசு இந்த ஆண்டும் விருதுக்கு உரியவரை அறிவிக்கவில்லை. லதாமங்கேஷ்கருக்கும், உஸ்தாத் பிஸ்மில்லா கானுக்கும் இறுதியாக வழங்கப்பட்டது இந்த விருது.

அரவிந்த்

-

© TamilOnline.com