வேகமாக வளர்ந்து வரும் சுப்ரமணியபுரம்
'சுப்ரமணியபுரம்' என்ற பெயரில் புதிய படம் ஒன்றை இயக்குகிறார் சுசி குமார். இவர் வேறு யாருமல்ல; பாலா, அமீர் போன்ற பிரபல இயக்குநர்களுடன் பணியாற்றியவர். படத்தின் இயக்குநர் மட்டுமல்ல தயாரிப்பாளரும் இவரே. 'சென்னை 28' படத்தில் நடித்த ஜெய் இப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். நாயகி ஸ்வாதி என்ற புதுமுகம். இவர்களுடன் கஞ்சா கருப்பு, இப்படத்தை இயக்கும் சுசி குமார் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

படத்தின் கதைக்களமே மதுரையில் உள்ள சுப்ரமணியபுரம்தான் என்கிறார் இயக்குநர் சுசிகுமார். இப்படத்திற்கான இசையை சின்னத்திரை புகழ் ஜேம்ஸ் வசந்தன் கவனித்துக் கொண்டு வருகிறார். இப்படத்தில் முக்கியக் பாத்திரம் ஒன்றில் நடிக்கிறார் இயக்குநர் சமுத்திரக்கனி. எந்தவித இலக்குகளும் இல்லாத ஒரு நண்பர்கள் கூட்டம். இறுக்கமான அவர்களது நட்புக்குள் பெண் ஒருத்தி நுழைகிறாள். யாராலும் பிரிக்க முடியாத நட்பு பெண் ஒருத்தியின் வருகைக்கு பிறகு கொஞ்சம் தடுமாறுகிறது. இதுதான் படத்தின் கதைக் கரு. எங்கேயோ கேட்டது போல் இல்லை?

கேடிஸ்ரீ, அரவிந்த்

© TamilOnline.com