நீண்ட இடைவேளைக்கு பிறகு மன்சூர்அலிகான்!
தன்னுடைய படங்களுக்கு வித்தியாசமான பெயர்களை சூடி மகிழ்வதை வழக்கமாக கொண்டு விளங்கும் நடிகர் மன்சூர்அலிகான் நீண்ட இடைவேளைக்கு பிறகு 'என்னைப் பார் யோகம் வரும்' என்கிற பெயரில் புதிய படம் ஒன்றை தயாரிக்கவிருக்கிறார்.

ஏற்கெனவே இவர்'ராஜமார்த்தாண்ட ராஜகம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன்' என்ற பெயரில் 'வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு' என்ற பெயரிலும் திரைப்பங்களை தயாரித்து அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

'என்னைப் பார் யோகம் வரும்' படத்தில் நாயகனாக மன்சூர்அலிகான் நடிக்கவிருக்கிறார். கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் மும்தாஜ். இவர்களுடன் விணுசக்கரவர்த்தி, தாமு போன்றோரும் நடிக்கவிருக்கிறார்கள்.

ராஜ்கென்னடி பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்து அளிக்கவிருக்கிறது. வருகிற மாதத்திலிருந்து இப்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.

கேடிஸ்ரீ

© TamilOnline.com