மறந்து போன மனிதநேயம்
மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ளது பல்லகுரி என்ற கிராமம். அதில் வசித்து வந்தார் இளைஞர் சந்தோஷ் ராய். அடிக்கடி பான் போடும் பழக்கம் கொண்ட அவர் ஒரு கடையில் இருந்து கொஞ்சம் பாக்கைத் திருடிக் கொண்டு ஓட, அதனை சிலர் பார்த்து விட்டனர். கையும் களவுமாய் மாட்டிக் கொண்டார் ராய். அவரது கையைக் காலைக் கட்டி அடித்து உதைத்த கிராமத் தினர், பின்னர் ஒரு ஜீப்பில் அவரைக் கட்டி, அருகில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத் துக்கு இழுத்துச் சென்றனர். அங்கு சென்றும் கும்பலாகச் சேர்ந்து அவரை அடித்து உதைத்தவர்கள், வெறியுடன் அவரது கண்களில் ஆசிட்டையும் ஊற்றி இருக் கின்றனர்.அதன் பின்னர் அவர் அந்தப் பகுதியில் காணப்படவில்லை. அவரது நிலை என்னவானது என்பதும் இதுவரை தெரிய வில்லை. அநேகமாக இறந்து போயிருக் கலாம். ஒருபுறம் மனிதநேயம் காப்பாற்றப்பட வேண்டும் என்று வன்முறையாளர்களுக்கு தூக்கு தண்டனை ரத்து செய்யப்படுகிறது. மறுபுறமோ திருட்டு போன்ற சாதாரண குற்றங்களுக்குக் கூட ஒரு சிலர் மீது அளவற்ற வன்முறை பிரயோகிக்கப்படுகிறது. மனித நேயத்தின் அளவுகோல் என்ன என்பதுதான் புரியவில்லை!

அரவிந்த்

© TamilOnline.com