மச்சக்கார ஜீவனின் பயணிகள் கவனத்திற்கு
ஹீரோவாக அறிமுகமாகி, 'காக்க காக்க' படத்தில் வில்லனாக நடித்துப் புகழ்பெற்று, மீண்டும் கதாநாயகனாக ஆனவர் ஜீவன். இவர் இ.எல்.கே. புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 'பயணிகள் கவனத்திற்கு' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். முழுக்க முழுக்க ரயிலிலேயே எடுக்கப்பட இருக்கும் முதல் தமிழ்த் திரைப்படம் இதுதானாம். எஸ்.ஏ. விஜயகுமார் என்ற புதுமுக இயக்குநர் இயக்கும் இப்படத்தில் ஜீவனுக்கு இணையாக நடிக்கப் போகிறவர் நமீதா அல்லது நயன்தாரா.

'ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கும் ஜீவன் ஒரு சம்பவத்தைச் சந்திக்க நேரிடுகிறது. அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன, அதிலிருந்து அவர் தன்னையும் காப்பாற்றிக் கொண்டு, பிற பயணிகளையும் எப்படிக் காப்பாற்றுகிறார்' என்பதுதான் கதை என்கிறார் இயக்குநர்.

தொகுப்பு: கேடிஸ்ரீ, அரவிந்த்

© TamilOnline.com