இது எப்படியிருக்கு?
தனக்குச் சொந்தமான வீட்டின் அனைத்து ரூமையும் வாடகைக்கு விட்டுவிட்டு தன் தள்ளாத வயதிலும் தளராமல், வீட்டு வாராண்டாவிலேயே வாழ்க்கையைக் கடத்தி மிகவும் அதிசிக்கனமாக அமெரிக்காவின் கெண்டக்கி நகரத்தில் மூதாட்டி ஒருவர் வாழ்ந்து வந்தார்.

அவர் இறந்த பின்னர், மிகவும் கஞ்சம் எனக் கருதிய மக்களின் நினைப்பைப் பொய்யாக்கும் வகையில் அமெரிக்க டாலர் 3.5 மில்லியனை கெண்டக்கி பல்கலைக்கழகத்திற்கு படிக்கும் மாணவ, மாணவியரின் 'Scholarship' க்கு என எழுதி வைத்திருந்தாராம்.

ஸ்ரீகோண்டு
ஆதாரம் : San Francisco Chronicle.

© TamilOnline.com