பி. சுசீலாவுக்கு பத்மா விருது
கண்டசாலாவுடன் தொடங்கி எஸ்.பி. பால சுப்ரமணியம் வரை என்று மூன்று தலை முறையாக 40,000 பாடல்களுக்கும் மேல் பாடியிருக்கும் பிரபல பின்ணணிப் பாடகி பி .சுசீலாவிற்கு இந்திய மத்திய அரசின் உயர் விருதான (பத்மஸ்ரீ, பத்மபூஷண் போன்ற) பத்ம விருதுகளில் எதுவும் இதுவரை வழங்கப்பட வில்லை. 'இதுவரை அவர் செய்திருக்கும் சாதனைகளுக்கு ஏற்ப அவர் கௌரவிக்கப் படவில்லை என்றாலும், இழப்பு திரை யுலகினருக்குத் தானேயன்றி அவருக்கு இல்லை' என்று பத்மவிபூஷண் விருது பெற்ற வரபிரசாத் ரெட்டி தெரிவித்துள்ளார். சுசீலாவின் பெயர் இதற்குப் பரிந்துரைக்கப் பட்டுள்ளதாக ஆந்திர அரசின் தகவல் குறிப்பு தெரிவிக்கின்றது. விரைவில் கிடைத்தால் நமக்கும் மகிழ்ச்சிதான்.

அரவிந்த்

© TamilOnline.com