பிறவிப் பயன்
பட்ட மரம் துளிர்க்கும்
சுட்ட புண்ணும் ஆறும்
பரந்த வானும் சுருங்கும் - ஆனால்
பிரிந்த உயிர் திரும்புமா?

நிலாவை வென்று விண்வெளியில்
நடந்தான்
செவ்வாயில் நீரைக் கண்டு களித்தான்
அச்சாக ஆடுகள் அடுகடுக்காய்
படைத்தான் - ஆனால்
மண்ணில் மரித்த மனிதனை மீட்டானா?

கல்வியும் செல்வமும் வருவது எதுவரை?
அதிகாரம் ஆணவம் ஆளுவது
எவரெவரை?
ஆட்டிவைப்பவன் நம் மேலே இருக்க
நீ என்ன? நான் என்ன? நீடித்து இங்கே
நிலையாய் நிற்பது தானென்ன? - எனவே
இந்தப்பிறவி அரிதென அறிந்திடு
இருக்கும் வரையில் இனிதே வாழ்ந்திடு
இதயத்தில் மனித நேயத்தை வளர்த்திடு
எங்கும் எதிலும் நல்லதே கண்டிடு - பிறவிப்
பயனை பின் வருவோர்க்கு உணர்த்திடு.

© TamilOnline.com